tamilnadu

img

ம.பி-யில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி

மத்திய பிரதேசத்தில், ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குழந்தை உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து சாகத்தர்பூருக்கு சென்ற பேருந்து ஒன்று, சன் மாவட்டம் ரிச்ஹன் ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால், ஆற்றில் கவிழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்து போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். மேலும், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.